Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, June 23, 2017

உலகெங்கும் 2037ற்குள் முருக யுகம்...

உலகெங்கும் 2037ற்குள் முருகப்பெருமான் தலைமையில் முற்றுப்பெற்ற சித்தர்கள் ஆட்சி.

மனிதன் ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்..

அன்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம். நாங்கள் இதுவரைக்கும் பத்து அல்லது இருபது கோடி மக்களுக்கு அன்னதானம் செய்திருக்கிறோம். இது எங்களுக்கு ஒரு கடுகு. ஆக இந்த சங்கம் உலக மக்களுக்கு நன்மை செய்ய வந்த சங்கமாகும்.

நாங்கள் இப்பொழுது சொல்வதை கேட்டுக் கொள்ளுங்கள், இந்த உலகத்தில் இனி தீவிரவாதம் அழிக்கப்படும். இல்லை இல்லை அடக்கப்படும். தீவிரவாதிகளை அடக்கும் ஆற்றல் எங்களுக்கு உண்டு. அவர்கள் பணிந்தால் ஆதரிப்போம். துணிந்தால் நசுக்குவோம்.

 மனிதர்கள் ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும். மரணமில்லா பெருவாழ்வு பெற்ற முருகப்பெருமான் வருகிறார். உலக மக்களுக்காக வருகிறார்.

முருகப்பெருமான் ஆட்சிக்கு வந்தால் பண்புள்ள மக்களுக்கு இடையூறு இருக்காது. நாட்டில் பருவமழை பெய்யும், உலகில் நிலநடுக்கம் இருக்காது, இயற்கை சீற்றம் இருக்காது, சாந்தமே வடிவான மக்கள் எல்லோரும் இனி எந்த குறையும் இல்லாமல் வாழலாம். அந்த காலமும் வந்துவிட்டது.

யோகம் மிகப்பெரிய இயல்புடையது என்பது அறியாது, முதலில் சைவத்தை கடைப்பிடிக்க சொல்லித்தராமல், காசுக்காக யோகம் சொல்லிக் கொடுப்பவர்கள் இனி நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அல்லது அவர்களது செயல்கள் கட்டுப்படுத்தபடும்.

ஆக இனி போலி ஆன்மீகவாதிகளும், போலி அரசியல்வாதிகளும், போலி மதவாதிகளும் அடக்கப்பட்டு மக்கள் காப்பற்றப்படுவார்கள். “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்ற இந்த ஓசை அகிலமெல்லாம் கேட்கப் போகின்றது. ஆகவே இந்த சங்கம் உலகத்தை காப்பாற்றும் என்று நம்பி இருங்கள். நிச்சயம் காப்பாற்றும்.

இப்படிக்கு
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்.
ஓங்காரக்குடில்,
துறையூர்.


நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3


2 comments:

  1. ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி

    ReplyDelete